×

ரஞ்சன்குடி கோட்டை, வாலிகண்டபுரம் சமஸ்கான் பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை ஏற்பாடு மும்முரம்

பெரம்பலூர்:ஆண்டு க்கு ஒரு முறை மட்டுமே தொழுகை நடத்தப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை, வாலி கண்டபுரம் சமஸ்கான் பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகைகளுக்கு ஏற்பாடு. தூய்மைப் படு த்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பள் ளி வாசல்களிலும் நாளை (3ம்தேதி)காலை 8மணிக்கு சிறப்புதொழுகை நடத்தப் பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத்த லங்களில் ஒன்றான, கிபி 16ம் நூற்றாண்டின் இறுதி யில் கட்டப்பட்டு இந்தியத் தொல்லியல்துறை கட்டுப் பாட்டிலுள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை வளாகத்திலுள்ள கீழ்க்கோட்டை பள்ளிவாச லிலும், 1723ம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான,இந்தியத் தொல்லியல்து றை கட்டுப்பாட்டிலுள்ள, வா லி கண்டபுரம் சமஸ்கான் பள்ளிவாசலிலும் ஆண்டுக் கு ஒருமுறை மட்டுமே நடத் தப்படும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நாளைக் காலை யில் நடைபெறவுள்ளது.

மேலும் மாவட்ட அளவில் பெரம்பலூர் மவுலானா மேல்நிலைப் பள்ளியிலு ள்ள ஈத்கா மைதானத்தில்,டவுன் பள்ளிவாசல், மதர ஸா பள்ளிவாசல், நூர் பள் ளிவாசல், மக்கா பள்ளிவாசல், மதீனா பள்ளிவாசல், ஆலம்பாடிசாலை பள்ளிவா சல், லெப்பைக்குடிகாடு மே ற்கு மஹல்லம் பள்ளிவாச ல், கிழக்கு மஹல்லம் பள் ளி வாசல், மாவட்டத்தின் மிகப் பெரிய வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசல்,அரு ம்பாவூர் ஜாமியா பள்ளிவா சல், வாலிகண்டபுரம் ஆஸா ர் மக்பூரா பள்ளிவாசல்,விசு வக்குடி ஜாமியா பள்ளிவா சல் மற்றும் தொண்டமாந்து றை, பூலாம்பாடி, அம்மாப் பாளையம், குரும்பலூர், சத் திரமனை, ஈச்சம்பட்டி, பெரி ய வடகரை, கை.களத்தூர், பசும்பலூர், பாடாலூர், பெரி யம்மாபாளையம், வெங்க னூர்,தேவையூர் ஆகியப்ப குதிகளில் உள்ள 56 பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படுகிற து. இதற்காக பள்ளிவாசல் கள் தூய்மைப்படுத்தப் பட்டு வருகின்றன.

Tags : Ranjangudi Fort ,Valikandapuram Samaskan Mosques , Special Ramadan prayers at Ranjangudi Fort, Valikandapuram Samaskan Mosques
× RELATED கனமழைக்கு சரிந்து கிடந்த வரலாற்று...