மதுரை: ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி எடுத்தோம்; சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை என்று மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் மற்றும் மாணவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்கள், அவசர கதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் மதுரை டீன் ரத்தினவேல் கவனத்திற்கு கொண்டுசெல்லவில்லை என்று தெரிவித்தனர்.