×

நாளை ரம்ஜான் தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட அறிக்கை:
ஹிஜ்ரி 1443 ரமலான் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (ஆங்கில மாதம் மே 1ம் தேதி) மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும், இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் செவ்வாய்க்கிழமை (ஆங்கில மாதம் மே 3ம் தேதி) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈதுல் பித்ர் (ரம்ஜான்) பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ghazi , Ramadán, Jefe Ghazi,
× RELATED பள்ளிவாசல்களில் கொரோனா பாதுகாப்பை...