சென்னை: வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இதயம் கொண்டு வரப்படுகிறது. சாலை விபத்தில் முளைச்ச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானமாக பெறப்பட்டு சென்னை கொண்டு வரப்படுகிறது. இதயம் கொண்டு செல்லப்படும் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில் காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.