×

ஆம்பூர் அருகே திடீர் தீயில் எரிந்து நாசமான கூரை வீடு

ஆலங்காயம்: ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்த உஷா என்பவர் ஆம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில், நேற்று மதியம் உஷாவுக்கு சொந்தமான குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்ததில் வீட்டிலிருந்த சாமான்கள், சைக்கிள், கட்டில், பீரோ மற்றும் ஆவணங்கள் என அனைத்து பொருட்களும் முழுமையாக எரிந்து நாசமானது.

தீ விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் உள்ள அனைவரும் வேலைக்குச்  சென்ற காரணத்தினால் விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தீ பிடித்து எரிந்த வீடு முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. தகவலறிந்து வீட்டிற்கு வந்த உஷா தீப்பிடித்து எரிந்து சேதமான வீட்டைப் பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து அறிந்த மாதனூர் வருவாய் ஆய்வாளர் வனிதா, வடபுதுப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட உஷாவிற்கு சேலை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

Tags : Ambur , Destroyed roof house burnt down by sudden fire near Ambur
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...