×

தமிழக முதல்வருக்கு இலங்கை மாகாண ஆளுநர் நன்றி

திருச்செந்தூர்:  இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்தியாகராஜா, நேற்று முன்தினம் திருச்செந்தூர் வந்தார். தனியார் விடுதியில் தங்கிய அவர், நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் ஜீவன்தியாகராஜா, அளித்த பேட்டியில் ‘‘தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்ததற்காக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இலங்கையில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் இந்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன். இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளது, மேலும் தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உணவுகளை தடையின்றி வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும்’’ என்றார்.



Tags : Governor of ,Province of ,Sri Lanka ,Chief Minister of Tamil Nadu , Chief Minister of Tamil Nadu, Governor of the Province of Sri Lanka,
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...