கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வளவம்பட்டி ஊராட்சியில் தற்சமயம் விவசாய பணி நடைபெற்று வருகிறது .இதில் சோளம் அறுவடை, உளுந்து நெத்து சேகரிப்பு, எள் மகசூல் எடுத்தல் போன்ற பணிகளுக்கு இடையே சம்பா நெல் அறுவடைக்கு பிறகு கோடை நாற்று நட்ட வகையில் தற்சமயம் சூப்பர் பொன்னி நெல் கதிர்களை நிலங்களில் இருந்து அப்பகுதி விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்து வருகிறார்கள்.
விவசாயிகள் கூறும்போது தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடிய நிலையில் தற்சமயம் வியாபாரிகள் வைத்தது தான் விலை இதனால் விவசாயிகள் கஷ்ட நிலைக்கு ஆளாவார்கள் என்றும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக இருந்தால் விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும் என தெரிவித்தனர்.