செங்கல்பட்டு: செங்கப்பட்டு, விதியாசாகர் மகளிர் கல்லூரியில் 2022 பண்பாட்டு கலச்சார கலை விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. வித்யாசாகர் கல்வி குழும தாளாளர் விகாஷ் சுரானா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஷாலினி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சன்டிவி செய்திவாசிப்பாளர் டி.எஸ்.ரங்கநாதன், இசையமைப்பாளர் ஆர்.கே.ஆதித்யாகிருஷ்ணா, தனியார் தொலைகாட்சி பாடகர் ரேஷ்மா ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளிடம் கல்வியின் சிறப்புகள், வித்யாசாகர் கல்வி குழுமத்தின் சிறப்புகள் குறித்து பேசினர். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மிலன் சாகர் 2022 பண்பாட்டு கலை போட்டிகளில் ஒட்டுமாக தொடர்ந்து மொத்த சாம்பியன் ஷிப் பட்டம் பெற்ற ஆங்கில துறை மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி தீபிகா நன்றி கூறினார்.