×

பேரவை கூட்டத்தொடருக்கு பிறகு மினி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி (திமுக) பேசுகையில், “தனியார் மினி பேருந்துகளின் வழித்தடத்தில் 4 கிலோ மிட்டர் தூரத்தை அதிகரித்து கொடுத்தால், பயனுள்ளதாக இருக்கும். நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் சேவைகளை தொடங்க அனுமதி வழங்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், “மினி பேருந்து திட்டத்தை 1989ல் கலைஞர் கொண்டு வந்தார். கிராமங்களுக்கு பேருந்து சேவை வழங்கப்பட்டது. பேரவை தொடருக்கு பிறகு தனியார் மினி பேருந்து உரிமையாளர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்” என்றார்.

Tags : Minister ,Sivasangar , Mini bus owner, negotiating. Sivasankar
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...