×

பெருங்குடி குப்பை கிடங்கில் தீ விபத்து: தீ மேலும் பரவாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் தீ மேற்கொண்டு பரவாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்தது. 15 ஏக்கரில் தீ பரவிய நிலையில் 5 ஏக்கரில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, குளிரூட்டும் பணி நடந்து வருகிறது. 12 தீயணைப்பு வாகனங்கள், 120 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ பரவிய பகுதிகள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அணைக்கப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி விளக்கமளித்தது.  


Tags : Perungudi ,Garbage Depot ,Chennai Corporation , Perungudi, Fire Accident, Control, Chennai Corporation
× RELATED வெள்ளக்கல் குப்பை கிடங்கில் பற்றியது தீ