சென்னை: சிறையில் இருந்த தங்கமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது; உடனடியாக தி.மலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிரிழந்துள்ளார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த உடன், உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.