×

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மண்பாண்டம், பீங்கான் விற்பனை கண்காட்சி: பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:
* கிராமப் பொருட்களுக்கு கண்ணை கவரும் வகையிலான மேலுறைப் பெட்டிகள், அடைப்பான்கள், விளம்பர துணுக்குகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்படும்.
* ரூ.25 லட்சம் செலவில் கதர் கிராமப் பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெற ஏதுவாக விளம்பர குறும்படங்களை தயாரித்து சமூக ஊடகங்கள், திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும்.
* தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் 10 மண்பாண்ட தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு 10 மண் அரைக்கும் இயந்திரங்கள் ரூ.6 லட்சம் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகிலுள்ள அம்சி தேன் பதப்படுத்தும் நிலையம் நவீன வசதியுடன் கூடிய பரிசோதனை கூடம் நிறுவப்படும்.
* சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கலைநயமிக்க, மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களின் விற்பனையை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும் விற்பனைக் கண்காட்சி நடத்தப்படும்.  இவ்வாறு அவர் அறிவித்தார்.

Tags : Chennai Valluvar Kottam Pottery, ,Ceramic Sale Exhibition , Chennai Valluvar Kottam Pottery, Ceramic Sale Exhibition: Minister's announcement in the Assembly
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...