×

பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய  பதவிகளுக்கான தேர்வு வருகிற ஜூன் 26ம் தேதி நடைபெறும் என கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தேர்வு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய  பதவிகளுக்கான தேர்வு வருகிற ஜூலை 2ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும்.

அதேபோல் தமிழ்நாடு மீன்வள பணிகளில் அடங்கிய மீன்வள உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு கடந்த மார்ச் 12ம் தேதியும், தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் (தொழில் மற்றும் வணிகத்துறை)  பதவிக்கான தேர்வு கடந்த மார்ச் 19ம் தேதியும் நடந்தது. இந்நிலையில் இந்த பதவிகளுக்கான சான்றிதழ் சரி பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற மே 5ம் தேதி முதல் 13ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DNPSC , Selection change for posts in Engineering: DNPSC Notice
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்