×

இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள்; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 21.11 லட்சம் பேர் விண்ணப்பம்.!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20.53 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று நள்ளிரவு 12 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், குரூப் -4 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மொத்தம்  7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.

இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பபடும்.  274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நேற்றுவரை 21.11 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று நள்ளிரவு 12 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : DNBSC Group 4 , Today is the last day to apply; 20.53 lakh people have applied for DNBSC Group 4 exam till now.!
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு முறைகேடு...