×

தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை மாநில மாநாடு: சென்னை கலைவாணர் அரங்கில் நாளை நடக்கிறது

சென்னை: தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவையின் முதல் மாநில மாநாடு நாணயம் என்ற தலைப்பில் நாளை மாலை 3 மணி அளவில்  சென்னை கலைவாணர் அரங்கில் அதன் தலைவர்  ஜே.கே. என்ற பி.ஜோதிகுமார் தலைமையில் நடக்கிறது. வழக்கறிஞர் பரசுராமன், தடா ராசா, பொன்.இளங்கோ, ஏசுபாதம், பிரெட்ரிக், மண்ணடி பாபு, கண்ணன், வைர.ஜீவானந்தம், மோகன கிருஷ்ணன், மகேஷ், நெல்சன், ஜெய கார்த்திகேயன், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண் ஆதியோர் கலந்துகொண்டு மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகின்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், எஸ்.பீட்டர் அல்போன்ஸ், சென்னை மாநகராட்சி  மேயர் பிரியாராஜன், உதயகுமார், துணைமேயர் எம்.மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் கு.செல்வபெருந்தகை, ஐ.பரந்தாமன், எஸ்.ஆர்.ராஜா, காரம்பாக்கம் க.கணபதி, ஜே.எம்.ஹச்.ஹஸன் மௌலானா, எஸ்.எஸ்.பாலாஜி, மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, நா.எழிலன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ஏ.வெற்றி அழகன், பனையூர் எம்.பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

பி.குணசேகரன், வரவேற்புரையும், சுவேப்கான் அறிமுக  உரையாற்றுகின்றனர். நிகழ்ச்சியின்போது தேசிய வர்த்தகர்கள் பேரவையில் புதிய உறுப்பினர்களை இணைப்பது, சிறப்பு விருது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் வர்த்தகர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டுக்கான  ஏற்பாடுகளை தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் தலைவர் பி.ஜோதிகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : State Conference of National Traders Progress Council ,Chennai Arthur Arena , National Business, Progress, Assembly, Conference
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...