×

குரோம்பேட்டை - திருநீர்மலை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற பரிசீலிக்கப்படும் :அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!!

சென்னை : நெல்லை - தென்காசி 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழக அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். அவர் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு, நெல்லை - தென்காசி 4 வழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

குரோம்பேட்டை - திருநீர்மலை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற பரிசீலிக்கப்படும். ஓமலூர் இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாலங்களை, மேம்பட்ட பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தருமபுரி - ஒகேனக்கல் சாலையை ஆராய்ந்து முதல்வர் அனுமதியோடு விரிவுபடுத்த இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஓசூர் - தனி சாலையை விரிவுபடுத்தும் பணி இந்த ஆண்டே முடிக்கப்படும்,என்றார்.


Tags : Chrompet - Thirunirmalai road ,Minister ,EV Velu , Chrompet, Thirunirmalai, Road, 4 lanes, Minister E.V.Velu
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...