×

அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பு?: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் குன்னூர் டி.எஸ்.பி. பணியிட மாற்றம்..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் தேனி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சந்திர சேகர் குன்னூர் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்தி வரும் தனிப்படையில் டி.எஸ்.பி. சுரேஷ் இடம் பெற்றிருந்தார். அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Godanadu ,Gunnur D.C. S.S. GP , Kodanad murder, robbery, Coonoor DSP, change of workplace
× RELATED குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில்...