சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி வெற்றிக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தொகுதி வாக்காளர் பிரேமலதா தாக்கல் செய்த தேர்தல் வழக்கு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தன் மீதுள்ள வழக்குகள் பற்றி வேட்புமனுவில் உதயநிதி தவறான தகவல் தந்ததாக வாக்காளர் பிரேமலதா வழக்கு தொடர்ந்திருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஏற்கனவே எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த வழக்கும் நிராகரிக்கப்பட்டது.