×

துவரங்குறிச்சி அருகே காட்டுத்தீ: பேராபத்து தவிர்ப்பு

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே நேற்று இரவு ஏற்பட்ட காட்டு தீயால் பெரும் பரபரப்பு நிலவியது.துவரங்குறிச்சி அடுத்த அக்கியம்பட்டி அருகே உள்ள கிளாமரத்த குட்டு மலை பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு நேற்று இரவு திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதி என்பதால் தண்ணீர் நிரப்பிய வாகனம் மேலே முடியவில்லை.

இதனால் தீயணைப்பு வீரர்கள் மட்டும் மேலே சென்று அங்கிருந்து செடிகளைக் களைந்தும், செடிகளை உடைத்தும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.மேலும் துவரங்குறிச்சி வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. மலைப் பகுதி என்பதாலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீவிபத்தில் மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமாகின. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



Tags : Twarankurichi , Wildfire near Twarankurichi: Avoidance of misfortune
× RELATED துவரங்குறிச்சி மாணவியின் கையில்...