×

தண்டையார்பேட்டை-காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளருக்கு ரூ.34.54 கோடியில் குடியிருப்பு: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் எழுது பொருள் மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* தண்டையார்பேட்டை-காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகளை முற்றிலும் இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் 160 குடியிருப்புகள் ரூ.34 கோடியே 54 லட்சம் செலவில் கட்டப்படும்
* முதன்முறையாக அச்சுத்துறைக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 72 ஆயிரம் செலவில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும்.
* அரசு மைய அச்சகத்துக்கு, 4 வண்ண எண்ணிம உற்பத்தி அச்சுப்பொறி ஒன்று ரூ.1 கோடியே 15 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.
* சென்னையில் உள்ள அரசு எழுதுபொருள் அலுவலகக் கட்டிடம் ரூ.1.25 கோடி செலவில் புனரமைக்கப்படும்
*  அரசு மைய அச்சகம் மற்றும் அனைத்து கிளை அச்சகங்களுக்கும் நெகிழி அடித்தட்டுகள் ரூ.21 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 


Tags : Thandayarpet ,Kamarajar ,Minister ,Saminathan , Rs 34.54 crore residence for a government printer in Thandayarpet-Kamarajar: Minister Saminathan
× RELATED தூத்துக்குடி காமராஜர் தினசரி...