×

தண்டையார்பேட்டை-காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளருக்கு ரூ.34.54 கோடியில் குடியிருப்பு: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் எழுது பொருள் மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:  தண்டையார்பேட்டை-காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகளை முற்றிலும் இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் 160 குடியிருப்புகள் ரூ.34 கோடியே 54 லட்சம் செலவில் கட்டப்படும் என கூறினார். மேலும் முதன்முறையாக அச்சுத்துறைக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 72 ஆயிரம் செலவில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும்.

அரசு மைய அச்சகத்துக்கு, 4 வண்ண எண்ணிம உற்பத்தி அச்சுப்பொறி ஒன்று ரூ.1 கோடியே 15 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.  சென்னையில் உள்ள அரசு எழுதுபொருள் அலுவலகக் கட்டிடம் ரூ.1.25 கோடி செலவில் புனரமைக்கப்படும்.  அரசு மைய அச்சகம் மற்றும் அனைத்து கிளை அச்சகங்களுக்கும் நெகிழி அடித்தட்டுகள் ரூ.21 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தார்.


Tags : Government ,Kandadarbate- ,Kamarajar Nagar ,Minister ,Saminathan , Thandayarpet, Kamaraj, to the printer, residence
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...