சென்னை: பப்ஜி மதனின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 3வது முறையாக தள்ளுபடி செய்தது. ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். தன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.