×

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

திருமலை: திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9 மணியளவில் மசூலிப்பட்டினம் நோக்கி பயணிகளுடன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. சில நிமிடங்களில் திருப்பதி பீமாஸ் ஹோட்டல் அருகே மேம்பாலத்தின் கீழ் சென்றபோது, திடீரென ரயில் தடம் புரண்டது. அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் உட்பட மேம்பாலத்தின் மீது சென்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் பார்த்தபோது ரயில் தடம் புரண்டதை அறிந்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். குறைந்த வேகத்தில் ரயில் சென்றதால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தினர். அதன்பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tirupati , Tirupati, Express, Rail, track derailed
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...