×

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வியாசர்பாடி ரவுடி கைது

பெரம்பூர்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வியாசர்பாடி ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சாட்சி ரமேஷ் (35). இவர் மீது எம்கேபி. நகர், வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து ரமேசுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில், போலீசார் ரமேஷை தேடி வந்தனர். சென்னை அருகே திருவேற்காடு பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவல்படி, எம்கேபி. நகர் போலீசார் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த ரமேஷை கைது செய்து விசாரித்தனர். இதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Vyasarpadi Rowdy , court, surrender, rawdy, arrest
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...