நாமக்கல் : நாமக்கல் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று ₹40 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மொத்தம் 1,150 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
நாமக்கல் கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் பருத்தி குவிண்டால் ₹8,050 முதல் ₹12,675 வரையிலும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 1,150 மூட்டை பருத்தி, ₹40 லட்சத்துக்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.