×

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது ஏன்?: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை தவறாக எதுவும் பேசவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது குறித்து சபாநாயகர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், மகாமகம் விபத்து குறித்து அம்மையார் என்ன பேசினாரோ அவை குறிப்பில் உள்ளதை தான் செல்வபெருந்தகை பேசியுள்ளார். வெளிநடப்பு செய்த பிறகு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது மீண்டும் பேச அனுமதிக்க முடியாது. எந்த தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கவில்லை; அம்மையார் பேசியதை தான் பேசியுள்ளார் என குறிப்பிட்டார்.

Tags : AIADMK ,Legislative Assembly ,Speaker ,Appavu , Legislature, AIADMK Member, Speaker Appavu
× RELATED சபாநாயகருடன் பேரவை செயலாளர் ஆலோசனை