சென்னை: தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசுதான் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு தனது கொள்கையை கவனித்து கொள்வது போல நாங்கள் எங்களது கொள்கையை பார்க்கிறோம். எங்கள் கொள்கையில் அரசு தலையிடுவதில்லை. ஆதீனங்களுக்கு என்று தனியாக சட்ட திட்டங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.