×

கர்ப்பிணியை பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது 108 ஆம்புலன்சை வழிமறித்த காட்டுயானை: அந்தியூர் அருகே பரபரப்பு

அந்தியூர்: அந்தியூர் அருகே கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது 108 ஆம்புலன்சை காட்டு யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி மயானம் அருகே பர்கூர் - அந்தியூர் பிரதான சாலையில் ஒற்றை ஆண் காட்டு யானை நேற்று மதியம் சாலையில் நின்று அங்கிருந்த மூங்கில் தூர்களை முறித்து தின்றது. அப்போது பர்கூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் எலச்சிபாளையம் மலை கிராமத்திற்கு நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்காக அழைத்து வர சென்றது. நடுரோட்டில் யானை நிற்பதை பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தினர். அரை மணி நேரம் நின்ற காட்டுயானை பின்னர் காட்டுக்குள் சென்றது. அதன்பின்னர் சென்ற புறப்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணியை மீட்டு பர்கூர் அரசு ஆரம்ப நிலைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர்.


Tags : Antheur , trouble elephant, misleads 108 ambulance, Anthiyur
× RELATED பர்கூர் வனப்பகுதியில் கீழே விழுந்த பெண் யானை பலி