திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை என்றாலும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்பட நிபந்தனைகளை அனைவரும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கொரோனா பரவல் மெதுவாக அதிகரித்து வருகிறது. எனவே இது கொரோனாவின் 4வது கட்டமாக இருக்கலாமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் நிபந்தனைகளை கடுமையாக பின்பற்ற தீர்மானிக்கப்பட்டு உள்ளது. நோய் பரவல் அதிகரித்து உள்ள நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த தீர்மானித்து உள்ளார்.
Tags : Wena George ,Kerala , Corona spread, face mask Minister of Health