×

ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி கணேசன் உறுதி.!

சென்னை: ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என அமைச்சர் சி.வி கணேசன் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அமைச்சர் சி.வி.கணேசன், திமுக ஆட்சியில் வேலை வாய்ப்பிற்கு பஞ்சமில்லை என்றும், எத்தனை இளைஞர்கள் படித்தாலும் அத்தனை இளைஞர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் எனவும் உறுதியளித்தார். மேலும், 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், இந்தாண்டு மட்டும் 89 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதில் 70% இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், எந்தெந்த மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படாமல் இருக்கிறதோ, அவற்றை கண்டறிந்து இந்தாண்டு பல்வேறு மாவட்டங்களில் தொழில் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இளைஞர்கள் புதிய தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்றும், எந்த நாட்டில் இருந்து வரக்கூடிய எத்தகைய தொழிற்சாலைகளாக இருந்தாலும் அதில் பணிபுரியக்கூடிய வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்க பல்வேறு திறன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Tags : Dimuka ,Minister ,Ganeson , DMK government will provide employment to one lakh youth by August: Minister CV Ganesan assured in the Legislative Assembly.!
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...