×

ஜோலார்பேட்டை வட்டார அளவில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை வட்டார அளவில் 19   பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.ஜோலார்பேட்டை நகரம் மற்றும் ஒன்றிய அளவில் தினசரி  கொரோனா தொற்று குறைந்து  வரும் நிலையில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை வட்டார அளவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளில் மற்றும் நடமாடும்  கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் சுகாதாரத் துறையினர் நாள் தோறும் பிசிஆர் பரிசோதனை  மேற்கொண்டு வருகின்றனர்..    இதில்  ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானதில்,  ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் 4 பேருக்கும், ஜோலார்பேட்டை ஒன்றிய அளவில் 14   பேர் உள்பட ஜோலார்பேட்டை வட்டார அளவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை அரசு மருத்துவர்கள் புகழேந்தி, முரளி, சுகாதார ஆய்வாளர் கோபி மற்றும் நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள்  ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று  கிருமிநாசினி மருந்து தெளித்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக    அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு  அனுப்பி வைத்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் வசித்த பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

The post ஜோலார்பேட்டை வட்டார அளவில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Zolarbate ,Zolarbat ,Corona ,
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!