சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த மனு அளிக்கப்பட்ட நிலையில் அனைத்து விசாரணைகளும் நிறைவு என தகவல் வெளியாகியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.