×

சேலத்தில் பாலியல் தொந்தரவு செய்து சிறுமியை தலை துண்டித்து கொலை செய்த குற்றவாளி தினேஷ் குமாருக்கு தூக்கு தண்டனை!!

சேலம் : சேலத்தில் பாலியல் தொந்தரவு செய்து சிறுமியை கொன்ற குற்றவாளி தினேஷ் குமாருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சாமிவேல். இவரின் மனைவி சின்னப்பொண்ணு. இவர்களின் கடைசி மகள் ராஜலட்சுமி வயது 13. தளவாய்ப்பட்டி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் வீட்டுக்கு அருகே வசிப்பவர் தினேஷ்குமார் என்கிற கார்த்திக். வயது 26. அவரின் மனைவி சாரதா. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இவர்கள் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இரு குடும்பத்தினரும் நட்பாகவே பழகி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்,  கடந்த 2018ம் ஆண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ்குமார் என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு சிறுமி ராஜலக்ஷ்மி ஆளாக்கப்பட்ட்டுள்ளார். சிறுமி அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாய் எதிரிலேயே தினேஷ்குமாரால் கொடூரமான முறையில் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ் குமார் சேலம் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதுதவிர, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தினேஷுக்கு போக்ஸோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


Tags : Dinesh Kumar ,Salam , Salem, sex, harassment, girl, murder, convict, execution
× RELATED அருமனை அருகே பெண்ணை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு