×

பவானிசாகர் அணையிலிருந்து 120 நாட்களுக்கு விவசாய பணிக்காக தண்ணீர் திறக்க உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. 25.04.2022 முதல் 22.08.2022 முடிய 120 நாட்களுக்கு, 8812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல், முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 24504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Bawanisagar dam , Order to open water from Bhavanisagar Dam for agricultural work for 120 days
× RELATED முழு கொள்ளளவை எட்டியது பவானிசாகர் அணை:...