சென்னை: எழுத்தாளர் ராஜ் கௌவுதமனுக்கு நீலம் நடத்தும் வேர்ச்சொல் தலித் இலக்கிய கூடுகையில் வானம் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வேர்ச்சொல் தலித் இலக்கிய கூடுகையில் ராஜ் கௌவுதமனை முதல் விருதாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இலக்கியத்தில் புனைவு, விமர்சனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு என பங்களித்தவர் ராஜ் கௌவுதமன் என்று பா.ரஞ்சித் குறிப்பிட்டிருக்கிறார்.