சென்னை: மாநில அரசின் முதலமைச்சரை பல்கலைக்கழங்கங்களின் வேந்தராக நியமிப்பதில் என்ன தவறு? என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருக்கிறார். குஜராத்துக்கு ஒரு சட்டம், தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டமா என்று பாஜகவினர் கேட்க அவர் வலியுறுத்தியுள்ளார். மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் வேறு காரணம் சொல்லி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டிருக்கிறார்.