சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டமசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர்கள் மசோதாவை தாக்கல் செய்கிறார். கர்நாடக மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்களை மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும் என அரசு தெரிவித்திருக்கிறது. உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கும் நிலையில் மசோதா இன்று தாக்கலாகிறது.