×

கழுத்தை அறுத்து மார்வாடி மனைவி கொலை: திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் கழுத்தை அறுத்து மார்வாடி மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கழுக்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பத்தே சந்த் (78). இவர் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில்  மார்வாடிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி பிரேம் கன்வர் (70) மற்றும் 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பத்தே சந்த் கடையிலிருந்து  இரவு 7 மணிக்கு  வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முதல்  தளத்தில் உள்ள அறையில்  மனைவி பிரேம் கன்வர் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து பதறிப் போனார்.

தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு இறந்துப் போன பிரேம் கன்வரின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து பிரேம் கன்வர் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து  விசாரித்து வருகின்றனர்.   சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு எஸ்.பி. சுகுணா சிங் நேரில் பார்வையிட்டார். குடும்ப பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. மார்வாடி மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேருந்து படியில் பயணம் மாணவர்களை பிடித்து போலீசார் எச்சரிக்கை: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தை சுற்றி  சுமார் 6 தனியார் பள்ளிகள் மற்றும் 2 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 7000  மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், பெரும்பாலான மாணவர்கள் பேருந்தின் உள்ளே இடமிருந்தாலும் உள்ளே செல்லாமல், படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பெண்கள், முதியவர்கள் பேருந்தில் ஏறவோ இறங்கவோ மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு  புதிய பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றனர். இப்பேருந்து, செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே வந்தது. அப்போது, பேருந்தை வழிமறித்த போலீசார், மாணவர்களை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டு,  எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags : Marwadi ,Stiral ,Thirukkukkukkudu , Marwari wife murdered by beheading
× RELATED அம்மாப்பேட்டை வீரமாகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை