×

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பட்டாக்கத்தியுடன் ரகளை: ரவுடி கைது

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று போதையில் வந்த நபர், அங்குள்ள வியாபாரிகளை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். பின்னர், அங்கிருந்த ஜூஸ் கடையில் இருந்து கல்லா பெட்டியை தூக்கிக் கொண்டு சென்றார். மேலும், அருகில் நின்றிருந்த காரின் முன்புறம் கத்தியால் வெட்டியதுடன், டிரைவரை மிரட்டியுள்ளார். மீன் வாங்க வந்திருந்த பொதுமக்களையும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அவரை, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மடக்கி பிடித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கடலூர் மாவட்டத்தை சார்ந்த குகன் (33) என்பதும், காசிமேடு பகுதியில் தங்கி, மீன் வியாபாரம் செய்து வருவதும், இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

Tags : Rowdy ,Kasimeddu , Rowdy arrested for rioting at Kasimeddu fishing port
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...