×

மாமல்லபுரத்தில் மர்மமான முறையில் இறந்த புள்ளிமான்

சென்னை: மாமல்லபுரம் அருகே மர்மமான முறையில் இறந்த புள்ளிமான், மாமிசத்துக்காக விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது தண்ணீர் இல்லாமல் உயிரிழந்தா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மாமல்லபுரம் அடுத்த சிறுதாவூர் காட்டுப் பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் வாழ்கின்றன. இவை, பகல் மற்றும் இரவு நேரங்களில் மாமல்லபுரம் அடுத்த பையனூர், சாவடி, இளந்தோப்பு, பட்டிப்புலம், நெம்மேலி, வட நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரங்களில் சுற்றி வருவது வழக்கம்.

சில நேரங்களில் இந்த புள்ளி மான்கள் வழி தவறி ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்து, வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதும் உண்டு. இதை தடுக்க, திருப்போரூர் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு கிராமத்தில் ஒரு முட்புதரில் ஒரு புள்ளி மான் இறந்து கிடந்தது. தகவலறிந்த, பட்டிப்புலம் ஊராட்சி தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன் திருப்போரூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு, வந்த வனச்சரக அலுவலர் கல்யாண் மற்றும் கால்நடை மருத்துவர்கள், இறந்த புள்ளி மானை உடற்கூறு ஆய்வு செய்து, ஒரு காட்டுப் பகுதியில் புதைத்தனர்.

Tags : Pointman ,Mamallapuram , Pointman who mysteriously died in Mamallapuram
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...