காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காட்டில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஊராட்சிகளில் செயல்பாடு, வளர்ச்சிப்பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். ஒன்றரை ஆண்டுகளாக கிராமசபை கூட்டம் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது.