×

வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலனில் கசிவு மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டது. இதில் மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 3வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அலகில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Vallur ,Thermal Power Station , Impact of leakage power generation in boiler at Vallur Thermal Power Station
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...