நாகர்கோவில்: சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே வாசன் பேசுகையில், தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்து வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்றார்.