×

மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் மதுபோதையில் பணியிலிருந்த பதிவறை எழுத்தர் மயக்கம்-துணை தாசில்தார் மீட்டு ஜி.ஹெச்சுக்கு அனுப்பிவைப்பு

துவரங்குறிச்சி : மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் பதிவறை எழுத்தர் மதுபோதையில் இருந்ததால் பொதுமக்கள் முகச்சுழிப்பு அடைந்தனர்.திருச்சி மண்ணச்சநல்லூர் அர்ஜூனன் தெருவை சேர்ந்த அன்புசெல்வன்(32). இவர் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில், ஆவணங்கள் பாதுக்காக்கும் அறை பதிவறை எழுத்தராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார். பணியில் இருக்கும்போதே அன்புசெல்வன் அடிக்கடி மதுபோதையில் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. அப்படி மதுபோதையில் இருக்கும்போதெல்லாம் உடனிருக்கும் அலுவலர்கள் அவரை மீட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பணியில் இருந்த அன்புசெல்வன் அளவிற்கு அதிகமான போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முழுவதுமாக நிதானத்தை இழந்த நிலையில் இருந்த அன்புசெல்வனை, துணை தாசில்தார் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் மீட்டு ஆட்டோ மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அன்புசெல்வனை பரிசோதனை செய்த மருத்துவர், அன்புசெல்வன் அளவிற்கு அதிகமாக மது மயக்கத்தில் இருந்ததால் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். பணியில் இருந்த பதிவறை எழுத்தர் மதுபோதையில் இருந்த சம்பவம் பொதுமக்களிடையே முகச்சுழிப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags : Manapara Tasildar Office ,Dasildar ,Hetchh , Manapparai Tasildar office registrar clerk was intoxicated, public face
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...