×

87.கவுண்டம்பாளையத்தில் பஞ்சாயத்து மெத்தனத்தால் சுகாதார சீர்கேடு அபாயம்-பொதுமக்கள் புகார்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம் 87.கவுண்டம்பாளையம் ஊராட்சி குமரமங்கலம் 5வது வார்டு பகுதியில், கடந்த பல வருடங்களாக சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. வேறு வழியின்றி சாக்கடை இறங்கி நடப்பதால் பல்வேறு தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘நடுரோட்டில் கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால் தெருவை சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரி பலமுறை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தறித்தொழிலாளர்கள் இந்த பகுதியில் இருந்து தொழிலுக்கு தேவையான பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Countampalayam , Tiruchengode: Tiruchengode taluka, Elachipalayam union 87. Countampalayam panchayat Kumaramangalam 5th ward area, last
× RELATED பிரதமர் மோடி கோவை வருகை; 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!