×

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பலி

கோத்தகிரி : கோத்தகிரி அருகே பேரகணி கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கட்டப்பெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தகவல் அறிந்து வந்த நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர், சிறுத்தையின் உடலை வனவிலங்கு ஆர்வலர் முன்னிலையில் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.இறந்த ஆண் சிறுத்தைக்கு 8 வயது இருக்கலாம்.

அழுகிய நிலையில் கிடந்ததால் சிறுத்தை இறந்து 20 நாட்களுக்கு மேல் இருக்கும். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Kotagiri , Kotagiri: A male leopard was found dead in a private tea garden in Perakani village near Kotagiri.
× RELATED கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது