×

கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க திட்டம் போலி இரிடிய கலசத்துடன் 6 பேர் பழநியில் கைது

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி வழித்தடத்தில் போலி இரிடிய கலசம் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பழநி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் வண்டி வாய்க்கால் பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடுமலையில் இருந்து பழநி நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் போலி இரிடிய கலசம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

காரில் இருந்த திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த இப்ராஹிம் (27), செல்வக்குமார் (31), சுந்தரராஜ் (26), விக்னேஷ் (32), அபுதாஹீர் (30),கொமரலிங்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (52) ஆகிய 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு, போலி இரிடியம் கலசத்தை விற்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலி இரிடியம் கலசம் மற்றும் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Palani ,Iridiya , Fake iridia urn, Palani, arrested
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது