சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% ஒதுக்கீடு வழங்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான பணியிடங்களை கண்டறிந்து நியமிப்பதை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டு மனைப்பட்டா தரப்படும் என அமைச்சர் கீதா ஜீவா அறிவித்தார்.