×

சென்னையில் ஊசி வடிவில் சாக்லேட் விற்பனை: அதிகாரிகள் அதிரடி ரெய்டு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சிரிஞ்ச் சாக்லேட் விற்பனை செய்யும் மிட்டாய் கடையில் உணவு துறை பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் மொத்த வியாபாரிகள் கடை மற்றும் மிட்டாய் தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். வடசென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள மொத்த வியாபாரி கடையில் மருத்துவத்திற்கு பயன்படுத்தபடும் சிரிஞ்ச் வடிவில் சாக்லேட் இருப்பதாக  உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதிஷ்குமார் தலைமையில் சோதனை நடத்தி வந்தனர். இதில் ஏராளமான குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட் மற்றும் சிரிஞ்ச்சு சாக்லேட்கள் கண்டுபிடிக்கபட்டன. இந்த ஊசி சிரிஞ்சுகள் எங்கிருந்து கொண்டு வந்தது என்றும் ஏற்கனவே பயன்படுத்தபட்டதா என்றும்  உணவு பாதுகாப்புதுறை ஆய்வு மேற்கொள்ளபடும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் கூறினார் .

தயாரிப்பு தேதி, காலாவதியாகும் நாள் விவரம் என, எந்தவொரு விவரமும் இல்லாத, ஆபத்தான சாக்லெட்டை  உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் காலாவதியான மற்ற சாக்லெட் பண்டலை பறிமுதல் செய்துள்ளனர். குழந்தைகளுக்கு, ஆபத்தான சாக்லெட்கள் விற்ககூடாது என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Needle ,Chennai , Needle chocolate Chennai, Authorities raid
× RELATED ஏற்காடு 11-வது கொண்டை ஊசி...