சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் ஆணையராக மாற்றுத்திறனாளியை நியமிக்க வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார். 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகள் அனைவருக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேரவையில் கோரிக்கை வைத்தார்.